Sunday 28 January 2018

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தானம் நடைபெற்றது

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூந்தமல்லி நகர கிளை மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை  இணைந்து நடத்திய இரத்த தான முகாம் ஜனவரி 28ந் தேதி  குமணன் சாவடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.  இதில் ஏராளமான நபர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.  
கிளை தலைவர் அல்லாபக்கஷ் தலைமையில் நடைபெற்றது.  மேலும் கிளை செயலாளர் அப்துல் கரீம்மாவட்ட செயலாளர் அஜாஸ் அஹமத் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment